12/08/2010

சோனியா காந்தியின் பலமுகங்கள் பற்றி சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சுக்கள்

அன்னை மாதா தாயார் சோனியா காந்தி தான் பிரதமராகாமல் மன்மோகன் சிங்கை பிரதமராக்கியதை தியகத்தின் சிகரமாக கொண்டாடுபவர்கள் பலர். பொன்னியின் செல்வன் கதையில் ராஜராஜ சோழன் தன் சித்தப்பாவுக்கு அரியணையை விட்டுக் கொடுத்தது பற்றி கல்கி மனமுருக எழுதியிருப்பார். அந்த ரேஞ்சுக்கு சோனியா வைக்கப்பட்டார்.

ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால் அவரது இந்தியக் குடியுரிமை பல வழக்குகளுக்கு இடமளிப்பதாக அமைந்து விட்டது. அவர் இன்னும் தனது இத்தாலியக் குடியுரிமையைத் துறக்கவில்லை. இது பற்றி சுப்பிரமணியன் சுவாமி போன்ற சிலர் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு எடுத்துரைக்க அவர்தான் சோனியாவை பிரதமர் ஆகாமல் தடுத்ததாகவும், அதன் காரணமாகவே அவருக்கு இரண்டாம் டெர்ம் தரப்படவில்லை என்றும் அறியப்படுகிறது.

அது இருக்கட்டும், சோனியாவின் குடியுரிமை பற்றி சுவாமி சொல்வதை கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம். சோனியாவின் குடியுரிமை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யப்படும் அபாயம் உண்டு.



கேஜிபி விஷயங்களை ரஷ்யா தோண்டி எடுத்த போது பல வெளிநாட்டுத் தலைவர்கள் பெயர்களும் வந்தன. அது சம்பந்தமாக சோனியா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் பெயர்களும் கேஜிபியிடமிருந்து ரெகுலராக பணம் பெற்றுக் கொண்டவர்கள் பட்டியலில் வந்தன. அது பற்றி சுப்பிரமணியன் சுவாமி சொல்வது:



சோனியாவின் சகோதரிகள் செய்யும் கள்ளக்கடத்தல்கள் பற்றியும் சுவாமி கூறுகிறார்.



ஐயையோ ராஹுல் காந்தியின் குடியுரிமையும் கேள்விக்குரியதாகி விட்டது போலிருக்கே. அவர் எப்படி எதிர்கால பிரதமராக முடியும்? சுப்பிரமணியன் சுவாமி சொல்வதை பாருங்கள். அவரது குடியுரிமையும் எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யப்படலாம் போலிருக்கே.



இதையெல்லாம் இப்போ ஏன் தோண்டி எடுக்கறே பெரிசு என கேட்கிறான் முரளி மனோகர். என்ன செய்வது ஸ்பெக்ட்ரமில் மன்மோகன் சிங்கால் சுதந்திரமாகச் செயல்படவிடாமல் தடுக்கும் காரணிகளில் இவையும் வந்து விட்டனவே ஆகவே அவற்றையும் பார்த்துவிட வேண்டியதுதான். சர்தார்ஜியை சுதந்திரமாக செயல்பட விடுவாங்கன்னு நினைக்கிறீங்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

7 comments:

எல் கே said...

அவரை முன்னிறுத்தி இவர்கள் பின் அடிக்கும் கொள்ளை .. குறிப்பாய் ,பட்டத்து இலவரசால் ராகுல் செய்யும் அட்டுழியம் தாங்கவில்லை. அமெரிக்காவில் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டவர்தானே இவர்

Unknown said...

//அமெரிக்காவில் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டவர்தானே இவர்
//

இது எப்போ நடந்தது LK

dondu(#11168674346665545885) said...

ராகுல் பற்றி எல்கேயின் பின்னூட்டத்தைப் பார்த்து நான் கூகளிட்டதில் எனக்கு கிடைத்த சுட்டி: http://satyameva-jayate.org/2007/11/15/rahul-gandhi-boston-2001/

அன்புடன்,
டோண்டு ராகவன்

virutcham said...

சுப்ரமணிய சுவாமி - ஒரு ஜோக்கர். சுவாமி என்ன செய்கிறார்? அப்பப்போ ஏதாவது அறிக்கை விட்டு பரபரப்பாக பேசப் படுவார் என்று மட்டும் நாம் நினைத்தால் இல்லை.


http://wp.me/p12Xc3-19D (Mr Clean Singh Vz Joker subramaniya swami)

D. Chandramouli said...

Many used to describe Dr. Swamy as a joker with no backing and he just throws up some issue or the other only to be in the lime light. But, all of a sudden, now he has turned out to be the darling of the Indian educated middle class and a conscience keeper of the nation! He is fighting a lone battle in the Supreme Court for what he believes as the right cause. Let the truth prevail - Satyameva Jayate, and he is vindicated. May he succeed in his attempts, for, after all, he is fighting the battle for the common man of India. May Paramacharya's blessings be showered on him.

hayyram said...

//சர்தார்ஜியை சுதந்திரமாக செயல்பட விடுவாங்கன்னு நினைக்கிறீங்களா?// ஹ ஹ காமெடியா எழுதறீங்க.

Narayanan said...

you should watch the video on sonia's education. i just love swamy for his punch dialogue in the last second.

sonia has not even passed 5th grade. in this regard she shares the dias with another self appointed tamil scholar mr. 'senile'( as said by his daughter kanimozhi in the radia tape) karunanidhi.

http://www.youtube.com/watch?v=-BfdiWpICo4&feature=related

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது