3/28/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 28.03.2009

சில சமயங்களில் பல விஷயங்கள் பதிவாக்கப்பட போட்டி போடுகின்றன. தனித்தனியாக பதிவு போடும் அளவுக்கு விஷயம் இருப்பதில்லை. ஆகவே என்ன செய்யலாம் என யோசித்து, அவற்றை சேர்த்து ஒரு பஞ்சாமிர்த பதிவாக போடலாம் என்ற யோசனை.

புலிவருது புலிவருது:
இந்த ஹெல்மட் சமாச்சாரம் போலவே பிளாஸ்டிக் பைகள் சம்பந்தமான சட்டதிட்டங்களும் blow hot blow cold முறையில் வருகின்றன, போகின்றன. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் எங்களூரில் இவற்றைத் தடை செய்தார்கள். பொருட்களை வாங்குபவர்கள் துணிப்பைகளுடன் கடைக்குச் செல்லுமாறு “அன்புடன்” அறிவுறுத்தப்பட்டனர். இதுதான் சாக்கு என சுபிட்சா கடையினர் பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் தருவதை சுத்தமாக நிறுத்தினர். ஆனால் பல கடைக்காரர்கள் ஓசைப்படாமல் தந்து தமது வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டதுதான் நடந்தது. திடீரென ஆரவாரமின்றி இந்த ஆணை நகராட்சியால் வாபஸ் பெறப்பட்டது. பல மாதங்கள் கழித்து இப்போது இதே ஆணை மறுபடியும் அமுலாக்கப்பட்டுள்ளது. இப்போது அதை கடைபிடிப்பவர்கள் முன்னை விட குறைவே. நான் என்ன நினைக்கிறேன் என்றால் இம்முறை அதை சீரியசாக எடுத்துக் கொள்ள பலர் தயாராக இல்லை. இது கவலையளிக்கும் விஷயமே. பிளாஸ்டிக்கால் சுற்றுப்புறச் சூழலுக்கு வரும் தீமைகள் தெரிந்ததே. அதன் உபயோகத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்தான். ஆனால் அதே சமயம் அதற்கான பத்திரமான மாற்றுப் பொருளை முதலில் தயார் செய்ய வேண்டாமா? பிளாஸ்டிக்கின் எல்லா அனுகூல விஷயங்களும் அதில் இருத்தலும் நல்லதுதானே. உதாரணத்துக்கு டீக்கடைகளில் பிளாஸ்டிக் கப்புகளுக்கு பதில் பேப்பர் கப்புகள் வந்துள்ளன. அவை சீக்கிரமே மக்கிப் போய்விடும் என நினைப்பதால், சுற்றுப்புறச் சூழலுக்கு ஆபத்து இருக்கக் கூடாது. ஆனால் சாமான்களை பேக் செய்ய பேப்பர் பைகள் உபயோகப்படுமா எனத் தெரியவில்லை. உலர்ந்த பொருட்கள் ஓக்கே. ஆனால் ஈரமான பொருட்களுக்கு அவை சரிபடாதுதானே. இந்த பிரச்சினையை குறிவைத்து செயல்பட்டு, பிளாஸ்டிக்குக்கு மாற்றை கண்டுபிடித்துவிட்டு ஆணையை பிறப்பித்தால் நன்றாக இருக்கும் அல்லவா? அதைவிடுத்து விதிகள் போடுவது, வாபஸ் வாங்குவது என என்ன இந்த விளையாட்டு? தேவையா அது?


Conficker C வைரஸ்:
வரும் ஏப்ரல் ஒன்றாம்தேதி முதல் இந்த வைரஸ் செயல்படத் துவங்குமாம். பேப்பரில் போட்டிருக்கிறார்கள். கூகளிட்டுப் பார்த்தேன். இந்த உரல் கிடைத்தது. விஷயம் தெரிந்த பதிவர்களில் யாரேனும் இது பற்றி பதிவு போடுவார்களா?


போலிகள் மீள்வருகை:
உண்மைத் தமிழன் மற்றும் செந்தழல் ரவி இது பற்றி எழுதியுள்ளனர். ஃபிரெஞ்சில் déjà vu எனக் கூறுவார்கள். அதாவது ஏற்கனவேயே இதை பார்த்திருக்கிறோமே என்ற உணர்வைத்தான் குறிப்பிடுகிறேன். இதனால் மிக அதிகமாகப், பாதிக்கப்பட்டவன் என்னும் முறையில் நான் சில வரிகள் கூற ஆசைப்படுவேன். இது பற்றி நான் எழுதிய இப்பதிவிலிருந்து சில வரிகளை கீழே தருகிறேன்:

“தத்தம் பதிவுகளில் அனானி மற்றும் அதர் ஆப்ஷன்களைச் செயலற்றதாக்குங்கள். பதிவாளர்கள் மட்டும் பின்னூட்டமிட வகை செய்யுங்கள். மட்டுறுத்தலை செயலாக்குங்கள். உங்களுக்குத் தெரிந்த பதிவாளர் பெயரில் உங்கள் பதிவுகளில் ஏதேனும் ஒரு வகையில் சந்தேகம் அளிக்கும் வகையில் பின்னூட்டங்கள் வந்தால், சம்பந்தப்பட்ட நண்பரை எவ்வகையிலேனும் தொடர்பு கொண்டு அப்பின்னூட்டத்தை எழுதியது அவர்தானா என்பதைப் பாருங்கள். மட்டுறுத்தலுக்கான பின்னூட்டங்களை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வருமாறு செய்து கொண்டால் அதில் பின்னூட்டமிடுபவரின் டிஸ்ப்ளே பெயர் ஹைப்பர்லிங்காக வரும். அதை க்ளிக்கிட்டு சரியான நபரா என்பதை சரி செய்து கொள்ளலாம்.

போலி பின்னூட்டங்கள் எவ்வாறு இன்னொருவர் பெயரில் உருவாகின்றன என்பதைப் பற்றி முகமூடி அவர்கள் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் பல உபயோகமானக் குறிப்புகள் உள்ளன.

போலி டோண்டு யார் என்பது பலருக்கும் தெரியும். என்ன செய்வது, அவன் மனம் பிறழ்ந்த அன்னியன் என்று அவனை விட்டுப் பிடிக்கிறார்கள். இருப்பினும் எவ்வளவு நாட்களுக்குத்தான் பொறுமை காப்பது? எதற்கும் இட்லி வடையின் இப்பதிவைப் பார்க்கவும்.

வலைப்பூக்கள் பல வகையில் உபயோகமானவை. அவற்றில் நஞ்சு போல வந்து புகுந்திருக்கும் போலி டோண்டு போன்ற இழிபிறவிகளுக்கெல்லாம் பயந்து கொண்டிருந்தால் நம்மை நாமே கண்ணடியில் தைரியமாகப் பார்த்துக் கொள்ள முடியாது”.

எதற்கும் இருக்கட்டும் என நான் சேகரித்த எலிக்குட்டி சோதனைகளை இங்கு கூறுகிறேன்.

1. அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை பாவிக்க பொறுமை வேண்டும். அது இல்லாதவர்கள் அவற்றை எடுத்துவிடலாம்.
2. பதிவர் ஆப்ஷனில் உங்களது பதிவு அமைவுகளில் போட்டோக்கள் வருவது செயலாக்கப்பட்டிருந்தால் பின்னூட்டமிட்ட பதிவரின் போட்டோவும் (அவரது புரொஃபைலில் இருந்தால்) இங்கள் பின்னூட்ட பக்கத்தில் வரும். எலிக்குட்டியை வைத்து சோதனை செய்தால் பதிவர் எண்ணும் கீழே தெரியும். அவை இரண்டும் மேட்ச் ஆவது மிக அவசியம்.
3. அதர் ஆப்ஷன்கள் உபயோகிக்கும் பட்சத்தில் பதிவர் எண்ணை கொண்டு வரலாம் ஆனால் போட்டோ வராது. ஆக 2 மற்றும் 3 சேர்ந்து நிறைவேற வேண்டும்.

சிவா மனசுல சக்தி:
இப்படத்துக்கான ஷோவுக்கு எங்களூர் வேலன் தியேட்டரில் பிற்பகல் 02.30 மணி ஆட்டத்துக்கு டிக்கெட் வாங்கி உள்ளே உட்கார்ந்தேன். பக்கத்து சீட்டில் இருப்பவருடன் பேச்சு கொடுத்ததில் வரவிருக்கும் படம் நான் ஏற்கனவே பார்த்த “யாவரும் நலம்” என்பதையறிந்து எகிறி குதித்து வெளியெ ஓடிவிட்டேன். நல்லவேளையாக டிக்கெட்டை கிழிப்பவர் துணையோடு எனது டிக்கெட்டை இன்னொருவருக்கு விற்க முடிந்தது. இல்லாவிட்டால் 40 ரூபாய் எள்ளுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11 comments:

மணிகண்டன் said...

மளிகை கடைல பிளாஸ்டிக் பை ப்ரீயா கொடுக்காம அஞ்சி ரூபான்னு வித்தா மக்கள் எல்லாம் துணிப்பை எடுத்துக்கிட்டு போவாங்க.

குசும்பன் said...

wie sind Sie Sir? lange Zeit keine Anmerkungen :-)

dieses ist ursprüngliches kusumban. Beifall!

குசும்பன் said...

Ich hörte doppelte Probleme vorbei. Congrats!

dondu(#11168674346665545885) said...

//Ich hörte doppelte Probleme vorbei. Congrats!//
Meinen Sie etwa das Problem seitens Pseudo-Dondu?

Mit freundlichen Grüßen,
Dondu N. Raghavan

குசும்பன் said...

Meinen Sie etwa das Problem seitens Pseudo-Dondu?


Ja!

Mit freundlichen Grüßen,
Kusumban.

குசும்பன் said...

Wie ist das Leben? Unterhaltgehen!

மணிகண்டன் said...

miskm ruskin kusk visk kusumban?

dondu(#11168674346665545885) said...

@Manikandan

Je ne comprends pas.

Salutations,
Dondu N. Raghavan

மாயவரத்தான் said...

Was ist denn hier los?

வஜ்ரா said...

ப்ளாஸ்டிக்குகள் பல ஐரோப்பிய நாடுகளில் தடை செய்துவிட்டார்கள் என்பதே எனக்கு சில வாரங்கள் முன் தான் தெரிந்தது. ஃப்ரான்ஸில் ஒரு பெரிய ஷாப்பிங் செயின் Auchan ல் பொருட்கள் வாங்கியபோது பாலிதீன் கவர்கள் கொடுக்காமல் 2 யூரோவுக்கு காகித கவர்கள் வாங்கவேண்டி வந்தது. (2 X 65 = 130 ரூபாய்)

மணிகண்டன் said...

@dondu,

Es ist sehr einfach. Überprüfen Sie es auf polnisch

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது