3/03/2009

போலீசார் வக்கீல்கள் பிரச்சினை

நீதி மன்றங்களால் தேடப்படும் போலீஸ் குற்றவாளிகள் என்னும் தலைப்பில் பதிவர் வினவு இட்ட இடுகையை பார்த்து யோசனையில் மூழ்கினேன்.

அது எப்படி செலக்டிவாக எழுத மனம் வருகிறது? பிரச்சினைக்கு மூல நிகழ்ச்சியான சுப்பிரமணியம் சாமி மேல் தாக்குதலை பற்றி எழுதும் இதே பதிவர் என்ன எகத்தாளமான தொனியில் வக்கீல்களின் அராஜகத்தை ஆதரித்து எழுதினார்? ஆனால் நீதி மன்றங்களால் தேடப்படும் வழக்கறிஞர் குற்றவாளிகள் பற்றி பேச்சு மூச்சு இல்லை. அவருக்கு பின்னூட்டம் இட்ட விசிலடிச்சான் குஞ்சுகள் தத்தம் வெறுப்பை வெளியில் கொட்டினர்.

சட்டக்கல்லூரியில் போலீசார் நின்று வேடிக்கை பார்த்தது இப்போது நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது. அவ்வாறு தாக்கப்பட்ட மாணவன் முதலில் கத்தியை எடுத்து கொண்டு வந்து தாக்க முற்பட்ட ரௌடி. அவனைப் போட்ட அடி அவனுக்கு தேவைதான். அடுத்த முறை வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டால் போலீசார் மரம் போல நின்று பார்த்தால், வக்கீல்கள் மேல் ஒருவரும் அனுதாபப்பட மாட்டார்கள்.

நான் என்றென்றும் அன்புடன் பாலா அவர்களின் இது சம்பந்தமான பதிவில் இவ்வாறு பின்னூட்டமிட்டேன். அது இங்கே: “The lawyers are impossible and they have to be taught a lesson but the policemen are no angels either. That too is true”.

அராஜகம் செய்த போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கையும் தேவை. ஆனால் அதே சமயம் போக்கிரித்தனமாக செயல்பட்ட வக்கீல்கள் யார் யார் என்று தெரியும் நிலையில் அவர்களது சன்னதுகள் பிடுங்கப்பட வேண்டும். இம்மாதிரியான ரௌடிகள் வழக்கறிஞர் தொழிலுக்கே அகௌரவம் விளைவிக்கிறவர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

15 comments:

Anonymous said...

First, a 60 year old Subramanian Swamy was attacked inside the court house in front of judges by advocates.

In an unprecedented and despicable show of intolerance, a group of advocates on Tuesday assaulted Janata Party president Subramanian Swamy and hurled eggs and invectives on him at the Madras High Court hall in full view of a couple of judges. Swamy, who was at the court in connection with the Chidambaram Natarajar temple case, received a couple of punches on his back from the unidentified unruly advocates.

..

Some threw rotten eggs inside the court hall and shouted filthy slogans. The slogans included `Brahmin dog down down’ and ..

Source : Express Buzz



Next, the police and the lawyers fought a pitched battle straight out of a war movie.

Though the entire top brass of the city police was present, they could exercise little control over the force. Even when the acting chief justice, flanked by a dozen senior judges, came out of the court and walked towards the battlezone to pacify the warring groups, they were greeted by stones and had to beat a hasty retreat. Justice Arumuga Perumal Adityan who advanced towards the police cordon waving his hands, was lathicharged and suffered an injury on his head. The climax to the clash was the burning of the police station on the campus. As security personnel withdrew from inside the structure, advocates barged in and smashed up the property before setting it on fire.

Source : Times of India

One of the judges remarked,

“There is a limit for everything,’’ Justice Chandru was heard yelling.

We will not go into the details (but broadly agree with the judge).

This whole incident is very fishy. Mr Swamy cannot even win 10,000 votes. His opinion on Sri Lanka means nothing just like Cho Ramasamy’s opinion means nothing. 39 of 40 Central MPs are not eligible to participate in the Ooty Dog Show (except Mani Shankar Aiyer - who is a fine specimen). There are only two canines in the Tamilnadu assembly (both not in the ruling coalition). Both of them resemble elephants more than dogs. From the police to education to economy to even temple administration - Brahmins are close to zero.

Whatever harm ‘Brahmin dog’ deposit loser Koombai Swamy can do, 39 victorious and brave MPs should be able to undo. Whatever harm Rajapalayam Cho Ramasamy can do via his lowly magazine, 22 TV channels and top print media owned by the Real Tamils should be able to undo.

This caste obsession is making Tamils the laughing stock of the world. The Real Dravidian Tamils should stop pretending like they are still being oppressed by some fancy force. They control the government at the centre in an unprecedented way. Finance, Health, Telecom, Transport,Home, Social Justice - all are with Real Tamils. The only “dog” Chippiparai Mani Shankar is relegated to obscurity.

Just treat the two old men like comic characters if you wish. Beating up 60 year old people is not very brave. The only place now to show bravery is in the fields of Wanni.If 39 Brave Hot Blooded Tamil MPs and 234 MLAs are not on your side, that is a bigger problem than two powerless old men.

Ignore them.

Anonymous said...

//
அது எப்படி செலக்டிவாக எழுத மனம் வருகிறது?
//

இவர்களெல்லாம் செலக்டிவாக எழுதவில்லை என்றால் தான் ஆச்சரியம்.

Anonymous said...

கண்ட தாயோளிகளின் பதிவுகளுக்கெல்லாம் நீங்கள் ஏன் வீண் விளம்பரம் கொடுக்கிறிர்கள்? (மேற்படி வார்த்தை அவன் பதிவிலிருந்து எடுத்தது தான்)

கிருஷ்ண மூர்த்தி S said...

இந்த மாதிரி ஆசாமிகள் எப்படி உருவானார்கள், யார் அவர்களை உரம் போட்டு வளர்த்தார்கள் என்பதையும் சேர்த்துப் பார்த்தால் என்ன செய்ய வேண்டும் என்ற விடையும் கிடைத்து விடுமே டோண்டு சார்! இப்போது தான் எ எ பாலாவின் பதிவில் பின்னூட்டமிட்டு விட்டு வந்தால் இங்கேயும் அதன் எதிரொலி:

"நோய் நாடி நோய் முதல் நாடி என்பதற்கேற்ப, இதன் மூல காரணங்கள் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் ஒழிய, இந்த மாதிரி அவலங்களைத் தீர்ப்பதற்கு முடியாது.

பிரிட்டிஷ் பாராளுமன்ற அமைப்பை முன்மாதிரியாகக் கொண்டு ஒரு அரசிய் சாசனத்தை ஏற்றுக் கொண்டு குடியரசாக அறிவித்துக் கொண்டோம். 1947 களில், அரசியல் சாசனத்தை நிர்ணயம் செய்வதற்காக கூடிய சபையில், இங்கே அதிகார அமைப்பு மூன்று அடுக்குகளைக் கொண்டதாக இருக்கும்-முதலாவதாக, சட்டம் இயற்றும் அமைப்பு, சட்ட சபை/நாடாளுமன்றம், இரண்டாவதாக, சட்டத்தை அமல்படுத்துகிற அதிகார அமைப்பு, மூன்றாவதாக, சட்டங்கள் முறையாக அமல்படுத்தப் பட்டதா என்பதை கண்காணித்து, நீதி வழங்கும் நீதிமன்றங்கள் , இந்த மூன்றில் எது உச்ச அதிகாரத்தை கொண்டது என்பதை ஒரு காரணத்தோடு தான் வரையறுக்காமல் விட்டிருப்பதாக, திரு அம்பேத்கர் சொல்கிறார். பாராளுமன்ற ஜனநாயகத்தில், முதிர்ச்சி அடையும் வரை, இந்த மூன்றும் மூன்று தூண்களாக இருக்கும்-எதோ ஒன்று தவறு செய்யும் போது மற்ற இரண்டும் அல்லது ஒன்றாவது check and balance சமன் செய்யும், அப்படி இருப்பதற்காகவே, இதில் எது உயர்ந்தது என்பதை வரையறுககவில்லை என்றார் திரு அம்பேத்கர்.

நடந்தது என்ன?
தவறு நடக்கும் போது தட்டிக் கேட்பது என்பதற்குப் பதிலாக, உடந்தையாக அல்லது பலநேரங்களில் கூட்டாளியாகவே இருப்பது என்ற நிலையை, 1970 களில் நம்முடைய அரசியல் வாதிகள் உருவாக்கினார்கள். பலமான தூண்கள் என்று கருதப்பட்டவை, ஒரு அழுகிய தக்காளியோடு இருக்கிற நல்ல தக்காளியும் கேட்டுப் போகும் என்கிற மாதிரி
இப்படி நாறிக் கொண்டிருக்கின்றன.

ஒரு T N சேஷனை சமாளிக்க முடியவில்லையா, தேர்தல் கமிஷனையே நீர்த்துப் போகச் செய்கிற மாதிரி, அதை மூன்று பேர் கொண்டதாக மாற்று, தலைமைத் தேர்தல் கமிஷனர் என்று சொல்லப் பட்டாலும் கூட, தலைமை அவருக்கில்லை, எவர் அரசுடன், அதாவது அரசியல்வாதிகளுடன் ஒத்துப் போகிறாரோ அவரே எல்லாம் என்று செய்தார்கள் இல்லையா? இப்போது கூட, அரசுடன் ஒத்துப் போகிற ஒருவர் தான் தலைமைத் தேர்தல் கமிஷனர் ஆகப் போகிறார். அவர் மேல் சொல்லப் பட்ட குற்றச் சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அரசோடு ஒத்துப் போகும் ஒரு ஜனாதிபதி, இப்படிப் பட்டவர்களைத் தான் இந்த நாற்பத்தி ஐந்தாண்டு கால ஜனநாயகம் உருவாக்கியிருக்கிறது.

இத்தனைக்கும் மூல காரணமாக, நமதுதேர்தல் அமைப்பு இருக்கிறது.

நமது தேர்தல் முறையில் உள்ள குறைகள், மற்றைய ஜனநாயக முறையில் உள்ள தேர்தல் முறைகள் இவைகளுடன் ஒப்பிட்டு, தினமணி நாளிதழில் கணக்கன் என்ற புனைபெயரில் திரு A N சிவராமன் எழுதியது, இன்றைக்குப் பொருத்தமாகவும், ஒரு நல்ல தீர்வைச் சொல்வதாகவும் இருக்கிறதென்றே நினைக்கிறேன்.

winner takes all என்கிற மட்டத்தில் ஒசத்தி முறை மாறினால் ஒழிய, புரையோடிக் கிடக்கும் இத்தனை அவலங்களையும் சரி செய்ய இயலாது."

Anonymous said...

சாமி தற்போதுதான் தாக்கப் பட்டுள்ளாரா....? இதற்கு முன்
இப்படி நடந்ததே இல்லையா...? சற்று பின் நோக்கிப் பார்த்து
இதே கோர்ட்டுக்கு ”வெளியே” நடந்த அந்த அவ மதிப்பை ஏன்
உங்கள் பேனா எழுத மறுக்கிறது... நீங்கள் மட்டும் செலக்டீவா
எழுதவில்லையா...? அந்த அநாகரீக தாக்குதல் பற்றி இப்போதும்
ஒரு வார்த்தை எழுதியிருக்கலாமே....?
அதைக் கண்டிக்க தடுக்கும் உங்களிடம் உள்ள அந்த ’வஸ்து’ எது...?

கந்தசாமி

வால்பையன் said...

நடுநிலை என்பது பெரும்பான்மையான மக்கள் எதிர்ப்பதை ஆதரிப்பது போலும்,
நான் வரல இந்த விளையாட்டுக்கு.
இதுநால தான் இத பத்தி நான் எந்த கருத்தும் சொல்றதில்லை.

இருந்தாலும் ஒரே ஒரு சந்தேகம்!

இவுங்க பேசினா அதுக்கு பேரு கருத்து சுதந்திரம் மத்தவங்க பேசினா மட்டும் ஏன் தாக்குறாங்க?

Anonymous said...

புகை பலம்ம்மா இருக்கே.. பொருமல் சத்தமும் பலம்ம்ம்மா இருக்கே.. எதுக்கும் ஜெலூசில் ட்ரை பண்ணுங்கோ அய்யங்கார்வால்!

dondu(#11168674346665545885) said...

//சற்று பின் நோக்கிப் பார்த்து
இதே கோர்ட்டுக்கு ”வெளியே” நடந்த அந்த அவ மதிப்பை ஏன்
உங்கள் பேனா எழுத மறுக்கிறது... //
நீங்கள் சொல்வதும் ஆலோசிக்கத் தக்கதே. வழக்கறிஞர்களது தரம் அதிமுக மகளிர் அணி லெவலுக்கு இறங்கியுள்ளது என்பதுதான் உண்மை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

நாளைக்கான கேள்விகள்:
1. போலீஸ்காரங்க தப்பே பண்ணலை, எல்லாமே வக்கீலுங்கதான்னு சொல்லறீங்களா?

2. “எனது சித்தியான கன்னட சினிமா துறையின் நூற்றாண்டு விழாவுக்கும் என்னை அழையுங்கள்” என்று சொன்னார் கமல். அதென்ன சித்தி?

Unknown said...

http://www.dinamalar.com/pothunewsdetail.asp?News_id=11447&cls=&ncat=TN

Anonymous said...

//வழக்கறிஞர்களது தரம் அதிமுக மகளிர் அணி லெவலுக்கு இறங்கியுள்ளது//

அன்று அவர் தப்பு இன்று இவர் சரி...
அன்று அதிமுக தப்பு இன்று சரி..
அன்று திமுக தப்பு.. இன்று(ம்) தப்பு...(?)
அன்று வக்கீல் சரி.. ... இன்று தப்பு..
அன்று போலீசு சரி... இன்று தப்பு....
என்ன தலை சுற்றுகிறதா...?
நீங்கள் முதன்மைபடுத்தும் தத்துவங்கள் போலவே
உங்கள் எண்ணமும் தலையைத்தான் சுற்றுகிறது...
ஆனால் ஆங்கிலத்தில் சொல்வார்களே...
READING BETWEEN THESE LINES என்று
-- சங்கரனின் வியாவரிக சத்யம் போன்று --
உங்கள் எழுத்தில் உள்ள அந்த மறைபொருள் நன்றாக புரிகிறது..
வாழ்க... அன்புடன் என்று முடிக்காதீர் வம்புடன் என்று
முடியுங்கள்...

கந்தசாமி

அரவிந்தன் said...

இதே சு.சாமிக்கு ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் அதிமுக மகளிரணியால் புடவையை தூக்கி காட்டி மரியாதை செய்யப்பட்டது என்பதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்

dondu(#11168674346665545885) said...

@அரவிந்தன்

ஆக, இந்த வழக்கறிஞர்கள் தரம் அதிமுக மகளிர் அணி ரேஞ்சுக்கு இருந்ததாக நீங்களும் ஒப்புக் கொள்கிறீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//அன்று அவர் தப்பு இன்று இவர் சரி...
அன்று அதிமுக தப்பு இன்று சரி..
அன்று திமுக தப்பு.. இன்று(ம்) தப்பு...(?)
அன்று வக்கீல் சரி.. ... இன்று தப்பு..
அன்று போலீசு சரி... இன்று தப்பு....
என்ன தலை சுற்றுகிறதா...?//

சுப்புரமணிய சாமிய பத்தி எல்லாத்துக்கும் தெரியும்,
உருப்படியா எதுவும் செய்யாட்டியும் வெறும் சவுண்டு மட்டும் டெல்லி வரைக்கும் வரும். ஆனா அந்தாள பத்தி இந்த பதிவில்லையே!

போலிஸ், வக்கில் பிரச்சனையில் ஒரு சார்பாக ஆதரவளித்தல் சரியாகுமா?
அது நடுநிலைதன்மையா?
இவர்களுடய கருத்துகள் எந்த அளவு உண்மைதன்மை வாய்ந்தது என்பது பற்றி என்று நினைக்கிறேன்

KANTHANAAR said...

///அது நடுநிலைதன்மையா?///
நடு நிலைமையா... இந்த உலகத்தில் ஏதும் நடு நிலைமை என்பது இல்லை... அப்படி சொல்பவர்கள் 1) தெரிந்து பொய் சொல்கிறார்கள் 2) தெரியாமல் பொய் சொல்கிறார்கள்
அவ்வளவுதான்..
கந்தசாமி

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது