3/26/2009

எங்கே பிராமணன் -- பகுதி 38

பகுதி - 38 (25.03.2009):
நாடி சோதிடர் வீட்டில் எல்லோரும் உட்கார்ந்திருக்க, நாடி ஜோசியர் அவர்களது தேவைகள் பற்றி கேட்கிறார். யாருக்கு நாடி சோதிடம் பார்க்க வேண்டுமோ அவரது பெயரைச் சொன்னால் சுவடி கிடைக்கிறதா என்பதைப் பார்க்கலாம் என்கிறார் அவர். முதலில் எல்லோருக்குமே சோதிடம் பார்க்கலாமா என கேட்க, பெயர்களைச் சொன்னால் தேட ஏதுவாக இருக்கும், இங்கே கிடைத்தால் கிடைக்கலாம், கிடைக்கவில்லை வேறு பல இடங்கள் உள்ளன. சில சமயங்களில் கிடைக்காமலேயே கூட போகலாம். எப்படியானும் கிடைக்கும் என்றிருந்தால் அதை நாடி வருவார்கள், ஆகவேதான் அதை “நாடி” சோதிடம் என அழைக்கிறார்கள் என்கிறார், சோதிடர். அதற்கெல்லாம் நேரம் போதாது என்பதை உணர்ந்து, அசோக்குக்கு மட்டுமே பார்க்க நினைக்கிறார்கள். அசோக் பெயரைச் சொன்னதும் சோதிடர் உள்ளே போகிறார். அசோக் மெல்ல சிரிக்கிறான். விளக்கம் கேட்ட அன்னையிடம் “சுவடி கிடைக்காது” எனக் கூறுகிறான்.

“அது எப்படி ரிஷிகள் எல்லோரையும் பற்றி எழுதியிருக்க முடியும்" என வசுமதி கேட்க, எல்லாமே ஆகாயத்தில் உள்ள ஆவணங்கள், அதாவது எல்லாமே அண்டத்தில் உள்ள ஈதரில் பதிவாகி உள்ளன. அவற்றை படிக்க முடிந்தவர்களால் எழுத முடியாதா என அசோக் கேட்கிறான். ரிஷிகள் பொறுத்தவரை எதிர்க்காலம் இறந்த காலம் என ஒன்றுமே இல்லை, உதாரணத்துக்கு தனது சுவடி கிடைத்து அதில் தனது இப்போதைய பிறவி (நிகழ்காலம்) தெரிந்தாலும், அதை எழுதியவரை பொறுத்தவரை அது எதிர்காலமே என்கிறான்.

அசோக் என்னும் பெயருக்கு பல சுவடிகள் கிடைத்து அவற்றை கொண்டு வரும் சோதிடர், ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பிக்க, ஒன்றன் பின் ஒன்றாக ரிஜக்ட் ஆக ஆரம்பிக்கின்றன. கடைசியில் அசோக்கின் சுவடியும் கிடைக்கிறது. இச்சுவடியை நாடிவரும் காலத்தில் அசோக்கின் தந்தையின் வயது 58 என்ற சிறிய ஆனால் சரியான விவரமும் சுவடியில் எழுதப்பட்டிருக்கிறது. அசோக்கின் குணநலன்களும் துல்லியமாக குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் மேலே படிக்கும் முன்னால் எங்கிருந்தோ வந்த பேய்க்காற்று அத்தனை சுவடிகளையும் கலைத்து போட்டு தெருவில் அவை பறக்கின்றன. எல்லோரும் ஓலைகள் பின்னால் ஓட அசோக் மட்டும் தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல நிற்கிறான்.

நாதன் வீட்டில் பாகவதரிடம் நடந்ததை கூற அவர் ஆச்சரியப்படுகிறார். பிறகு அசோக் பற்றி அறிந்து கொள்ளும் நேரம் இன்னும் வரவில்லை என தனது ஊகத்தை வெளிப்படுத்துகிறார். பிறகு அவதார புருஷர்கள் பற்றி பேச்சு வர, புத்தரை அவதாரமாக இந்து மதம் ஏற்றுக் கொள்ளவில்லை என பாகவதர் கூறுகிறார்.

இப்போது சீனில் வரும் சோ புத்தரை 21-ஆவது அவதாரமாக கருடபுராணத்தில் குறிப்பிட்டிருப்பது பற்றி படித்து காட்டுகிறார். மொத்தம் 22 அவதாரங்கள் எனக்கூறி அவற்றை பட்டியலிடுகிறார். ஆயினும் பாப்புலராக 10 அவதாரங்கள் மட்டுமே பேசப்படுகின்றன எனவும் கூறுகிறார்.

பாகவதர், எல்லாவற்றுக்கும் நேரம் வர வெண்டும் எனக் கூறி அகலிகை சாபம் பற்றியும் அதன் விமோசனம் பற்றியும் கூறுகிறார். தங்களால் முடியவில்லை, ஆகவே பாகவதரே யூகத்தால் கூறுமாறு நாதன் கேட்கிறார்.

அசோக் அவதார புருஷனாக இருக்கலாம், அல்லது சிறு சறுக்கலால் ஒரு உத்தம பிறவி மானிட ஜன்மம் எடுத்தவனாக இருக்கலாம், அல்லது ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக பூலோகத்துக்கு அனுப்பப்பட்டவனாக இருக்கலாம் எனக் கூறி விட்டு எல்லாவற்றுக்கும் நாதன், தான் மற்றும் வசுமதி கூட்டாக பிரார்த்தித்து கடவுளைக் கேட்கலாம் என அவர் கூற, மூவரும் பிரார்த்திக்கிறார்கள்.

சோவின் நண்பர் அவரிடம் கூட்டு பிரார்த்தனை பற்றி கேட்க, அது பற்றி சோ விளக்குகிறார். அது இந்து மதத்தில் ஒரே வழியாகக் கூறப்படவில்லை. இந்த மதத்தில் தனிப்பட்ட பிரார்த்தனைகளே உள்ளன, இருப்பினும் அவ்வப்போது இதுவும் நடக்கிறது எனவும் கூறுகிறார்.

கூட்டுப் பிரார்த்தனை நடக்க ஆரம்பிக்கிறது.

கைலாயத்தில் அம்மையப்பன் வீற்றிருக்க அவர்களைக் காணவந்த நாரத்ர், வசிஷ்டர் மற்றும் விசுவாமித்திரர் அன்னையையும் பரமனையும் வணங்குகின்றனர்.

இதென்ன புதுக்கதை என நண்பர் விழிக்க, இனிமேல்தான் அசோக் பற்றிய தேவலோக ரகசியம் திறக்கப்பட உள்ளது என சோ கூறுகிறார்.

இப்போது டோண்டு ராகவன். இந்த எபிசோடை நான் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். இனிமேல் வரும் எபிசோடுகள் இன்னும் அதிக விஷயங்களை தரப்போவதாகவும் ஊகிக்கிறேன். ஆகவே இப்பகுதியை உடனேயே தருகிறேன். எதற்கும் இந்தப் பதிவையும் பார்த்து விடுங்கள்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2 comments:

வால்பையன் said...

//அதை நாடி வருவார்கள், ஆகவேதான் அதை “நாடி” சோதிடம் என அழைக்கிறார்கள் என்கிறார், //

அப்போ
பாடி வந்தா பாடி ஜோசியமா?
ஓடி வந்தா ஓடி ஜோசியமா?

Anonymous said...

Blogger வால்பையன் said...

//அதை நாடி வருவார்கள், ஆகவேதான் அதை “நாடி” சோதிடம் என அழைக்கிறார்கள் என்கிறார், //

அப்போ
பாடி வந்தா பாடி ஜோசியமா?
ஓடி வந்தா ஓடி ஜோசியமா?//


permanent sishyar
180 degree out of phase -thoughts
100 % true follower

keep it up tail boy

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது