11/29/2010

ஸ்பெட்ரம் ஊழல் சம்பந்தமாக சோவின் பேட்டி ஜெயா டிவியில்

இட்லி வடையின் இப்பதிவில் வந்த சோவின் பேட்டியின் வீடியோக்கள் யூட்யூப்பில் வந்தன. அங்கிருந்தே நானும் அவற்றை எம்பெட் செய்து இங்கும் போடுகிறேன். இது பரவலாக எல்லோரையும் போய்ச் சேர வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம். யூ ட்யூபின் வீடியோக்களின் சுட்டிகளை காட்டித் தந்த இட்லி வடைக்கு நன்றி. இப்போது வீடியோக்களுக்கு போகலாமா:

வீடியோ-1


வீடியோ-2


வீடியோ-3


வீடியோ-4


வீடியோ-5


வீடியோ-6


வீடியோ-7


வீடியோ-8


இப்போது டோண்டு ராகவன். சி.பி.ஐ., பிரதம மந்திரி, கருணாநிதி, கனிமொழி ஆகிய யாவரும் சோவின் பார்வையிலிருந்து தப்பவில்லை. ராசா சின்ன ராசா கைய வச்சான்னு ஏற்கனவேயே பாடிவிட்டதால், அவரை ஏற்கனவேயே சேர்த்தாகி விட்டது.

ஆனால் மேலே சொன்ன பேட்டிக்கு பிறகு நேற்று சுப்பிரமணியன் சுவாமியின் பேட்டி ஜெயா டிவியில் வந்தது. அதில் அவர் தெளிவாகவே கூறிவிட்டார், ராசாவுக்கு 10%, கருணாநிதிக்கு 30% மற்றும் சோனியா & அவர் சகோதரிக்கு 60% என பணப்பங்கீடு என்று. பிறகு ஏன் சர்தார்ஜி ரியேக்ட் செய்யப் போகிறார்? அவர் தனிப்பட்ட முறையில் பெரிய பதவிகளில் இருந்தவர். உலக வங்கிக்கு எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்தானே. இங்கிருந்து கொண்டு சீப்பட வேண்டுமா என எனக்குத் தோன்றுகிறது.

சுப்பிரமணியன் சுவாமி வீடியோ கிடைத்தால் எனது வலைப்பூவில் எம்பெட் செய்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8 comments:

virutcham said...

சோ சொல்லுவது போல் மக்கள் மிகுந்த வெறுப்புக்குள்ளாகி இருப்பதாக தி.மு.க பேட்டையை சேர்ந்தவர்களே முணுமுணுக்க துவங்கியாயிற்று.
ராஜா பதவியை துறக்கும் முன் சுவாமி ஜெயா வில் கொடுத்த பெட்டியை பார்த்தேன். நேற்று பேட்டி பார்க்க முடியவில்லை. சுட்டி கிடைத்தால் தவறாமல் கொடுக்கவும். எப்படியும் மறு ஒளிபரப்பு வரும் என்றே நினைக்கிறேன்.

சுவாமி குறித்த எனது பதிவு,
http://wp.me/p12Xc3-19D

M Arunachalam said...

Sir,

Can you post this article in your blog, for the benefit of many readers, which has come in 29th Nov.'10 Indian Express newspaper, if possible, with a Tamil translation? Mr. S. Gurumurthy has now thrown his hat in the 2G Scam ring along with Dr. Subramanyam Swamy and Cho and is in his usual full flow.

http://expressbuzz.com/opinion/columnists/sonia%E2%80%99s-certificate-pm%E2%80%99s-ultimate-humiliation/226710.html

அருளு, சுருளு மற்றும் பார்ட்டி ஆரம்பிக்கலாம் பாப்பான், பூணூல், மனு, மேல்வர்க்கம், இத்யாதி, இத்யாதி. ஸ்டார்ட் மீசிக்.

dondu(#11168674346665545885) said...

@எம். அருணாசலம்
போயும் போயும் சோனியா அன்னை மாதா தாயாரிடமா சர்தார்ஜி செர்டிஃபிகேட் வாங்க வேண்டும்?

ஒரு துக்ளக் ஆண்டுவிழா கூட்டத்தில் வாஜ்பேயிக்கு பாரத் ரத்னா ஏன் தரக்கூடாது என்ற கேள்விக்கு, சோ அவர்கள் நகைச்சுவையாக அதை அவர் அவ்வாறு பெறுவதென்றால் பிரதிபா பாட்டிலிடமிருந்துதான் பெற வேண்டும், அதற்கு பேசாமலேயே இருக்கலாம் என்றார்.

அதுதான் இங்கும் எனக்கு நினைவுக்கு வந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

M Arunachalam said...

டோண்டு சார், சர்தார்ஜி என்ன கேட்டு வாங்கினதா இந்த certificate எல்லாம்? இத்தாலி மாதா அவங்களே பாவப்பட்டு "எவ்ளோ அடிச்சாலும் வலிய பொறுத்துகிட்டு தாங்கறான் இவன்"னு கொடுக்கறது அது. மேலும், பகல் கொள்ளை அடிக்க ஏதுவாக எல்லா வழியையும் வாசலையும் திறந்துவிட்டு பாதுகாப்பு அரணாக இருந்த சர்தார்ஜிக்கு கொடுக்காம வேற யாருக்கு கொடுக்கணும்னு சொல்றீங்க? கொள்ளைல 30% பங்கு கொடுக்கப்பட்டதா சொல்லப்படற திருடர்கள் முன்னேற்ற கழக தலைவருக்கா?

Suresh Ram said...

..... என்னென்ன கடுமையான தண்டனைகளை யெல்லாம் கொடுத்தார்கள் என்றால், குற்றம் செய்த ஒரு தலித் விவசாயியை, கூலிக்காரா! நீ குற்றம் செய்தாயா, இல்லையா? என்று கேட்டு, அந்த விவசாயி அதை நிரூபிப்பதற்கு முன்பே, சாணிப் பாலை காய்ச்சி, சுண்டக்காய்ச்சி, கொதிக்க கொதிக்க அந்தச் சாணிப்பாலால் அந்த ஆதிதிராவிடத் தோழனை குளிப்பாட்டுவார்கள். அவன் துடித்துத் துவளுவான். அந்தக் காட்சியையெல்லாம் நான் கண்டிருக்கின்றேன். அதனுடைய விளைவு, கருணாநிதியை ஒரு கம்யூனிஸ்ட்காரனாக அன்றைக்கு ஆக்கியது......

..... முடிந்து விட்டது. முந்த்ரா ஊழல் வெறும் முணுமுணுப்போடு முடிந்துவிட்ட ஊழலாக ஆகிவிட்டது. நான் சொல்கிறேன், இன்றைக்கு ராசாமீது குறையே இருக்கட்டும். ராஜினாமா செய்த பிறகு, டி.டி.கிருஷ்ண மாச்சாரியைப் பற்றி வந்த முந்த்ரா ஊழல் நின்று விட்டது. ராசா மீது பேசப்பட்ட இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் மாத்திரம் இன்னும் பேசப்படுகிறதே என்ன காரணம்? ராசா தலித். டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் - அவரது பெயரிலேயே இருக்கிறது ஆச்சாரியார். ஆச்சாரியாருக்கு ஒரு நியாயம் - ஆதி திராவிடருக்கு ஒரு நியாயமா? இதுதான் இந்தியாவிலே சமதர்மமா? கூச்சல் போடுகின்ற கட்சிகளைக் கேட்கிறேன். ஒன்றை நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். என்னுடைய அரசில் தி.மு.கழக அரசில் உமாசங்கர் என்கிற ஒரு ஆதி திராவிடத் தோழர் - அவர் ஆதி திராவிடரா அல்லவா என்பது விசாரணையில் இருக்கிறது. அவர்மீது ஒரு புகார் வந்தபோது அதை நாங்கள் கேட்டோம் - விளக்கம் கேட்டோம் அவரிடத்திலே. விளக்கம் கேட்டவுடன் இந்த கம்யூனிஸ்ட்டுகள், அ.தி.மு.க. எம்.பி.க்கள் எல்லாம், ஆஹா! உமாசங்கர் தலித் என்ற காரணத்தால், ஆதி திராவிடர் என்ற காரணத்தால் அவரை ஒழிக்கப் பார்க்கிறார் கருணாநிதி என்றெல்லாம் சொன்னார்கள். ஒன்றும் ஒழிக்கவில்லை. இவர்களுடைய எதிர்ப்பைக் கண்டதும் என்றே எடுத்துக் கொள்ளட்டும். அல்லது நியாயமாக சட்டரீதியாக செய்யப்பட்ட காரியம் என்று எடுத்துக் கொள்ளட்டும். தற்காலிக மாக விலக்கப்பட்டிருந்த அவரை மீண்டும் பணியிலே சேர்த்து ஆணை பிறப்பித்தது இந்தக் கருணாநிதிதான். தலித் என்பதற்காக அடியோடு பழி வாங்க வேண்டும் என்று எண்ணவில்லை - தலித் ஆயிற்றே என்று எதிர்க் கட்சிக்காரர்கள் சொன்னவுடன், ஆமாம் - தலித்துதான். இருந் தாலும், பிறகு விசாரித்துக் கொள்ளலாம். இப் போது அவர் மீண்டும் பதவிக்கு வரட்டும் என்று அவரை பதவியிலே அமர்த்தியிருப்பது இந்தக் கருணாநிதிதான்......




.... இது திராவிடர்களுக்கும், ஆரியர்களுக்கும் நடந்த போராட்டம்தான் என்று ஜவகர்லால் நேரு தனது மகளுக்கு எழுதிய கடிதம் என்ற புத்தகத்திலே எழுதியிருக்கிறார்.

ஆரிய - திராவிட யுத்தம் இப்போது அரசியல்ரீதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது!

இப்பொழுது அரசியல்ரீதியாக அந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தாங்க வேண்டிய, அதைச் சமாளிக்க வேண்டிய பெரும் பொறுப்பு நம்முடைய தோள்களுக்கு வந்திருக்கிறது.......

இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்

http://dmkthondan.blogspot.com/2010/11/blog-post_4865.html

Arun Ambie said...

முக்காத்துட்டுக்கு மூக்கித்திய வித்தவன்னு ஊருநாட்டில் சொல்வார்கள். அப்படி விற்பவன் விவரம்கெட்டவனாக இருக்கவேண்டும், அல்லது அதீத புத்திசாலியக இருக்கவேண்டும். இராசா எப்படிப்பட்டவர் என்பது ஊரறிந்த இரகசியம்.

பதவியேற்ற முதல் நாளே பெருந்தொகை பெற்று, அதைத் தலைமையிடம் தந்த விசுவாசி. முன்னிறுந்த பேரப்பிள்ளை குறுந்தொகை கூடத்தரவில்லையே என்று கோபம் செம்மொழிச் செம்மலுக்கு. மொத்தத்தில் பொதுப்பணம் குடும்பத்தாரால் ஏப்பம். தனியன் செய்தால் தகராறு, தலைவன் செய்தால் வரலாறோ?

Unknown said...

/*அதில் அவர் தெளிவாகவே கூறிவிட்டார், ராசாவுக்கு 10%, கருணாநிதிக்கு 30% மற்றும் சோனியா & அவர் சகோதரிக்கு 60% என பணப்பங்கீடு என்று*/

பார்ப்பன பரதேசி பசங்க தான் பங்கு பற்றி சொல்லி புளுக வந்துட்டணுக....உங்க புராண புளுகு எல்லாம் முடிஞ்சி இப்போ இந்த மாறி புளுகு .....சும்மா புளுக வேண்டியது தானே......கேப்பையில நெய் வடியுதுன்ன..நம்ப ஒரு கூட்டம் இருக்கும்போது உங்களை போன்ற பார்ப்பன பரதேசிகள் இன்னும் இதுபோல புளுகலாம்............சோ,சு.சாமி போன்ற பார்ப்பன பரதேசிகள் அரசியல் ப்ரோகேரா இருந்துகொண்டு ஸ்பெக்ட்ரம் பற்றி பேச வந்துடணுக....ஏன்டா உங்களை நான் கேட்குறேன்......அர்த்தர்ஸ் ஊழல்,காமன்வெல்த் ஊழல், எடியூரப்பா ஊழலெல்லாம் என்னங்கடா ஆச்சு....பார்ப்பன பரதேசி பசங்களா...மரியாத பதில் கொடு Mr டோண்டு......நாட்டை பற்றி கவலை படும் நாய்களாக இருந்தால் இந்த ஊழல் பற்றி சோ பார்ப்பான், சு.சாமி பேட்டி கொடுக்கணும்,எழுதணும்.......யாரா ஏமாத்தி தி.மு.க ஆட்சிய கவிழ்க்க பார்குரிங்க.............

நல்லதந்தி said...

அதெப்பிடி PhP, உங்களைப் போன்ற வீரர்களின் ப்ரொஃபைல் எப்போதுமே இருட்டிலேயே இருக்கு!. அனாமத்து கும்பல்கள்களுக்கு இருட்டுதான் பிடிக்கும் போலிருக்கு!. நீங்க மூஞ்சியைக் காட்டிட்டுதான் பேசனும்னு ஒண்ணுமில்லை. இப்படிப்பட்ட முட்டாளோட மூஞ்சியை நாங்க பாக்கமுடியிலியே அப்படிங்கற ஆதங்கம்தான்! :)

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது