11/11/2010

டோண்டு பதில்கள் பகுதி மீண்டும் தொடங்க எண்ணம் - முரளி மனோகரது பதிவு

டோண்டு பெரிசு அனானி ஆப்ஷனை எடுத்ததுமே இது பற்றி யோசித்தேன். இருந்தாலும் சற்றே ஆறப்போடலாம் என விட்டுப் பிடித்தேன். இப்போது தோன்றுகிறது மீண்டும் ஆரம்பித்தால் என்ன டோண்டு பெரிசிடம் கேட்க அதுவும் என்னை இப்பதிவை போடச் சொல்லிடுத்து.

இப்போ நல்ல விஷயம் என்னன்னாக்க டோண்டு பெரிசு மெனக்கெட்டு “அனானி (வியாழன் காலை 09.30-க்கு கேட்டவர்)” என்றெல்லாம் நீட்டி முழக்க வேண்டியிருக்காது. கேள்வி கேட்டவர் பெயரை ஹைப்பர் லிங்குடன் போட்டால் ஆயிற்று வேலை.

ஆனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவைப்படும் (டோண்டு பெரிசு சொன்னதுபோல)

1. முகத்தை மூடிய ப்ரொஃபைல்கள் கீழே வரும் கேள்விகள் வம்பில்லாத கேள்விகளாக இருந்தால் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அவையே பிறரைத் திட்டி வந்தால் அதற்காகவே நிராகரிக்கப்படும்.

2. பிறரைத் தாக்கி வரும் கேள்விகளை கேட்பவர்கள் ஊர் தெரிந்த பதிவர்களாக இருப்பது அவசியம். ஏனெனில் அவர்கள் அசிங்கமாக எல்லாம் திட்ட மாட்டார்கள் - பட்டாப்பட்டி, வெளியூர்காரன், மங்குனி அமைச்சர், கும்மி, பன்னிக்குட்டி ராமசாமி போன்ற சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, என நம்பப்படுகிறது. அப்படியே வந்தாலும் இருக்கவே இருக்கிறது மட்டுறுத்தல். கேள்வியை எழுதிவிட்டு பதிலளிக்க மறுப்பதும் ஒரு வழி. அதே தீவிரத்துடன் டோண்டு பெரிசு திரும்ப அட்டாக் செய்து பதிலைத் தருவதும் சில சமயம் நடக்கும்.

3. இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ளோணும். ஏதேனும் நிகழ்வைக் குறித்து கேள்வி கேட்டால் அதற்கான சுட்டிகளை முடிந்தவரைக்கும் தருவது நலமாக இருக்கும்னு டோண்டு பெரிசு கருதுகிறது.

4. வழக்கம்போல கேள்விகள் பின்னூட்டங்களாக எந்தப் பதிவிலும் வரலாம், இப்பதிவையும் சேர்த்து.

5. சரி கேள்விகள் வரவேயில்லைன்னாக்க?
இதில் என்ன பிரச்சினை? டோண்டு பதில்கள் பதிவு(கள்) வராது அவ்வளவே.

அவ்வளவுதானே டோண்டு பெரிசு?

அன்புடன்,
முரளி மனோகர்

40 comments:

எல் கே said...

வருமா வரதா ??

dondu(#11168674346665545885) said...

@எல்கே
வரும் ஆனா வராது.

அதாகப்பட்டத்து, கேள்விகள் இருந்தால் வரும். இல்லாட்டி வராது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

எல் கே said...

நல்லது

எல் கே said...

முதல் கேள்வி

ராசா பதவி விலகத் தேவை இல்லை என்று சிதம்பரம் கூறி இருக்கிறார். மேலும் நேற்றைய செய்தி படி பதவி பரி போகும் நிலை இன்று அவ்வாறு இல்லை என்று ஒரு தகவல். இடையில் முதல்வர் குடும்ப உறுப்பினர் சோனியாவிடம் பேசியதாக ஒரு செய்தி..

CAG ரிப்போர்ட் படி ஒருத்தர் பதவி விலகத் தேவை இல்லை. அந்த ரிப்போர்ட் மதிப்பற்றது என்று சொன்னால் அப்படிப்பட்ட துறை எதற்கு ?

இதில் உங்கள் கருத்து என்ன

மதுரை சரவணன் said...

மேற்கண்ட கேள்வியின் தொடர்சியாக அப்படி ராசா பதவி விலகினால் அ.தி.மு.க காங்கிரஸ் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உண்டா...?

Veliyoorkaran said...

@Dondu.//

யோவ் கிழ போல்டு.,ஏன்யா இந்த வேலை உனக்கு...டெய்லி எந்திரிச்சோன்ன எவன் குன்டியவாவது நோண்டணும்..நோண்டிட்டு தனியா போய் உக்காந்து வெரல மோந்து பார்க்கணும்..இது ஒரு பொழப்பு உனக்கு..சரி பதிவெழுதுறேன் பேர்வழின்னு ஊர்ல உள்ளவனஎல்லாம் வருசகாலமும் சாவடிக்கிரியே எப்பவாச்சும் ஒரு நல்ல பதிவு எழுதிறியா.எழுதறது பூரா வாந்தி, வைத்தால...இதுல கேள்வி பதில் மசுரு வேற..நீங்க பெரிய சுஜாதா கொட்.., இதுக்கு ரெண்டு பேர் வந்து கேள்வி வேற கேக்குறாங்கே...இந்த பொழப்பு பொழைக்கரதுக்கு நீ ........................., பெரிய மனுசனா லட்சணமா நடந்து பழகு...லூசு டோமர் மாதிரி பீகேவ் பண்ணாத...! உன் பதிவுக்கு ஒரு கமெண்ட்டே அதிகம்...உன் மண்டையும் நீயும்...இனிமே எங்கயாச்சும் என் பேர உன் பதிவுல பார்த்தேன்..அன்னிக்கு இருக்குடி உனக்கு.....!

dondu(#11168674346665545885) said...

@வெளியூர்காரன்
நான் சொன்னதை அப்படியே நிரூபித்தததுக்கு நன்னி.

என்னோட பதிவுல வந்து திட்டுமாறு கெஞ்சி, நான் கொசுவையெல்லாம் திட்ட மாட்டேன்னு சொல்ல வெக்ஸ் ஆகிப்போனதெல்லாம் மறந்து போச்சா?

கொசுத்தொல்லையெல்லாம் மீறி வந்தவன் இந்த டோண்டு ராகவன்.

டோண்டு ராகவன்

Veliyoorkaran said...

@Dondu.///

நீ ஒரு மானம்கெட்ட டாகு...எவ்ளோ அடிச்சாலும் வாங்கிகிட்டு வலிக்காத மாதிரியே க்ரிப்பா பேசுவ...அதுவும் ஜெய்ச்ச மாதிரி வேற பேசுவ....இன்னிக்கு உன்ன உன் பதிவுல வெச்சு அடிச்சா உனக்கு புடிச்ச கமெண்ட்ஸ் மட்டும் அப்ப்ரூவ் பண்ணி படிக்கறவங்களுக்கு நீ ஜெய்ச்ச மாதிரி படம் காட்டுவ...நீ அப்ரூவ் பண்ற வரைக்கும் வெயிட் வேற பண்ணனும்..இதெல்லாம் தேவையா..வா ராஜா.வா...பட்டாபட்டில இருக்கு இன்னிக்கு உனக்கு வேடிக்கை..! (தவிர நீ ஹிட்ஸ் ரேட் ஏத்திக்கற போதைக்கு நாங்க ஊறுகாய் ஆகா முடியாது வாத்யாரே...)...
நோ மோர் கமெண்ட்ஸ் ஹியர்...ஓவர் டு பட்டாப்பட்டி...! :)

dondu(#11168674346665545885) said...

@வெளியூர்க்காரன்
முதல் தடவை வரும்போதுதான் ஹிட்ஸ்வ் ஏறும், அதே தினம் மறுபடி அதே ஐபிலேருந்து வந்தா ஹிட்ஸ் ஏறாதுன்னு கூட தெரியாத கபோதிக் கொசுவா நீர்?

டோண்டு ராகவன்

Veliyoorkaran said...

@Pothumakkal..//

பாருங்க பொதுமக்களே..நான் என்ன பேசுறேன்..இந்த லூசு கப்போதி என்ன பேசுதுன்னு.(உனக்கென்ன மசுரு மரியாதை...).ஏன்யா நீ நெஜமாவே லூசா..இல்ல லூசு மாதிரி நடிக்கறியா...என்ன பதிவுலகத்துல உன்ன பத்தி எதாச்சும் பரபரப்பா பேசணும்..அதான உன் ஆசை..விடு பண்ணிரலாம்..யோவ் பட்டாப்பட்டி..சீக்கிரம் பதிவ போடுயா...! :)

dondu(#11168674346665545885) said...

//தவிர நீ ஹிட்ஸ் ரேட் ஏத்திக்கற போதைக்கு நாங்க ஊறுகாய் ஆகா முடியாது வாத்யாரே...//
சொல்லறது என்ன, செய்யறது என்ன?

டோண்டு ராகவன்

ரிஷபன்Meena said...

என் வீட்டில் இது போல நடந்து, அப்போ குற்றவாளியை போலீஸ் என்கவுண்டர் செய்தாலும் அதை எதிர்பேன் என்று உதார்விடுபவர்கள். பின்னூட்டத்தில் ஒருவர் சங்கடமான கேள்வி கேட்டால் அவரைக் கடித்துக் குதறிவிடுவது ஏன்

ரிஷபன்Meena said...

வெளியூர்,

மற்றுக் கருத்துக்கள் இருப்பவர்கள் அடுத்த தரப்புகளை நக்கல் அடிப்பது வரை ஓ.கே.நக்கல் சில சமயம் ரசிக்க கூடியது ஆனால் ஏன் வசவுகளுக்குள் போகனும்.

பதிவரசியில் தெரியாத பொதுஜனத்தையும் கொஞ்சம் நினைவில் வையுங்களேன்.

dondu(#11168674346665545885) said...

//பதிவரசியில் தெரியாத பொதுஜனத்தையும் கொஞ்சம் நினைவில் வையுங்களேன்.//
கண்டிப்பாக.

ஆனால், அதே சமயம் என் கையிலே ஃபுல் கண்ட்ரோல் இருக்கல்லவா, ஆகவே எங்கு அத்துமீறும் வசவுகளை மட்டுறுத்த வேண்டும் என்பதையும் உறுதியாக அறிந்து வைத்துள்ளேன்.

உங்களது இன்னொரு பின்னூட்டம் கேள்வியாக ட்ரீட் செய்யப்படுகிறது. பதிலை அதற்கான அடுத்த பதிவில் தருகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அருள் said...

கேள்வி வருவதற்கு முன்பே, பதில் போடுராங்க...

http://tvpravi.blogspot.com/2010/11/blog-post_12.html

dondu(#11168674346665545885) said...

@அருள்
கட்டியங்காரன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா? அதில்லையென்றால் ஏசு வருகிறார், ஏசு வருகிறார்னு கூச்சல் போடற அல்லேலூயாக்காரர்ளையாவது பார்த்திருப்பீங்கதானே?

இல்லேன்னா இப்பப் பாத்துக்குங்க.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அல்லோ மிஸ்டர் டோண்டு, நாம டெல்லில மீட் பண்ணியிருக்கோம்னு நெனக்கிறேன், அப்போ உங்களூக்கு மண்டைல மூளை இருந்துச்சு முடி இல்ல, இப்போ உங்களூக்கு முடி இருக்கு, மூளை இல்ல! பைதி பை, ஏதோ நாங்க அசிங்கமா திட்டுறோம்னு எழுதியிருக்கிங்க? ஏதோ நம்மல வெச்சி காமெடி பண்ணி ஒரு பதிவ தேத்தியிருக்கறதுனாலே மன்னிச்சி விட்டுடுறேன்.
இனிமே இந்தமாதிரி அல்பமா பண்றதா இருந்தா சொல்லி அனுப்பிச்சிடுங்க, நாங்களும் முன்னாடியே வந்து ஓட்டுப் போட்டு உங்க் ஆசைய நிறைவேத்துறோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எங்களப் பத்தி பிரபல பதிவர்கள்னு போடாம, ஊர் தெரிந்த பதிவர்கள்னு போட்டா எப்பிடி? பிரபல பதிவர்கள்னு போடனும்னு தானே பேச்சு? வாங்குன காசுக்கு கரெக்டா சொலிய பாக்க வேணாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்பிடியே பதிவு எதிர்பதிவுன்னு ஜாலியா போயிக்கிட்டு இருக்கு, நம்மல்லாம் பிரபலப் பதிவர்கள்தானு எல்லோரும் ஒத்துக்கர வரைக்கும் யாரும் குறுக்க வந்து காரியத்த கெடுத்துடாம இருக்கோனும்!

pichaikaaran said...

1 ஆங்கில மொழியை பள்ளியில் இருந்து படிக்கிறோம்.. பல கோச்சிங் வகுப்புகளுக்கும் சென்று அந்த மொழி அறிவை வளர்க்கிறோம்..

இது போன்ற வசதிகள் இல்லாமல், ஜெர்மன் ஃபிரென்ச் போன்ற மொழிகளை, குறுகிய கால பயிற்சியில் மட்டும் கற்க முடியுமா..
அப்படி கற்றாலும், ஆங்கிலதில் கிடைக்கும் நுபுணத்துவம் அதில் கிடைக்குமா ?

2. பல போராளிகள், நல்லவர்கள், அப்பாவிகள் கொல்லப்படும்போது அதை கண்டு கொள்ளாத அறிவு ஜீவிகள், சமூக விரோதிகள் கொல்லப்படும்போது அதீதமாக உணர்ச்சிவசப்படுவதற்கான உளவியல் காரணங்கள் என்ன ?

அருள் said...

பார்வையாளன் said...

// //1 ஆங்கில மொழியை பள்ளியில் இருந்து படிக்கிறோம்.. பல கோச்சிங் வகுப்புகளுக்கும் சென்று அந்த மொழி அறிவை வளர்க்கிறோம்...இது போன்ற வசதிகள் இல்லாமல், ஜெர்மன் ஃபிரென்ச் போன்ற மொழிகளை, குறுகிய கால பயிற்சியில் மட்டும் கற்க முடியுமா...அப்படி கற்றாலும், ஆங்கிலதில் கிடைக்கும் நுபுணத்துவம் அதில் கிடைக்குமா ? // //

முதல் மொழியை நன்றாகக் கற்பதுதான் பன்மொழிப் புலமைக்கு அடிப்படை. (தமிழ்நாட்டில் தமிழ் முதல் மொழி). முதல்மொழியில் நல்ல தேர்ச்சி கிடைக்கும் வேளை, அந்த முதல் மொழி மூலமாக இரண்டாம் மொழியை திறம்படக் கற்க வேண்டும். (தமிழ் நாட்டளவில் ஆங்கிலம்).

இந்த இரண்டும் நல்லபடியாக நடக்குமானால் - மூன்றாம் மொழி, நான்காம் மொழி, அய்ந்தாம் மொழி என பன்மொழிகளைக் கற்பது எளிது என்பதே மொழியியல் வல்லுநர்களின் கருத்து.

// //2. பல போராளிகள், நல்லவர்கள், அப்பாவிகள் கொல்லப்படும்போது அதை கண்டு கொள்ளாத அறிவு ஜீவிகள், சமூக விரோதிகள் கொல்லப்படும்போது அதீதமாக உணர்ச்சிவசப்படுவதற்கான உளவியல் காரணங்கள் என்ன ?// //

இது ஒரு பார்வைக் கோளாறு. நல்லவர்கள் அப்பாவிகள் கொல்லப்படும்போதும் அறிவுஜீவிகள் எனப்படுவோர் குரல்கொடுத்தாலும் அதை பத்திரிகைகள் கண்டுகொள்ளாது, நீங்களும் அதனை ஒரு செய்தியாகக் காண மாட்டீர்கள்.

ஆனால், சமூக விரோதிகள் எனப்படுவோர், சட்டத்தின் வழியில் அல்லாமல் "சமூகவிரோதமான முறையில்" கொல்லப்படும்போது - அதற்கு எதிரான கருத்துகள் மட்டுமே பத்திரிகைகளால் பெரிதுபடுத்தப்படுகிறது. நீங்களும் ஊன்றிப்படிக்கின்றீர்.

---இது எனது பதில்...ஹி..ஹி

dondu(#11168674346665545885) said...

பதில்களுக்கு நன்றி அருள். நானும் அக்கேள்விகளுக்கு பதில்ளித்து வைத்து விட்டேன். பதிவு வெளிவருபோது பார்த்து கொள்ளவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கருடன் said...

@Dondu

அன்பும், பண்பும், பாசமும் கொண்ட டோண்டு ஐயா அவார்களுக்கு. நீங்கள் ஹிட்ஸ்க்காக விஷயங்களை திறித்து எழுதும் கேவலமான பதிவர் என்று மக்கள் கூறுவது உண்மையா? நான் புது பதிவர் விளக்கவும்... (அசிங்கமா பேசல.. அதனால பதில் சொல்றிங்க..)

கருடன் said...

@Dondu

//பட்டாப்பட்டி, வெளியூர்காரன், மங்குனி அமைச்சர், கும்மி, பன்னிக்குட்டி ராமசாமி போன்ற சில விதிவிலக்குகளைத் தவிர்த்து//

அசிங்கமா திட்டுவாங்க தெரிஞ்சி வம்பு இழுக்கறிங்களே எதுக்கு?? ஊர்ல இருக்கவன் எல்லாம் உங்கள ரொம்ப கேவலமா திட்டறான் (யாருனு கேக்க கூடாது நான் பயந்த சுபாவம்) அவங்களை எல்லாம் விட்டு மங்குனி, பன்னிகுட்டி மட்டும் புதுசா உள்ளை இழுத்து இருக்கிங்களே ஏன்? அதிகமா ஆள்வர ப்ளாக் உங்களை திட்டி பதிவு போடுவாங்க உங்க ஹிட்ஸ் ஏறூம் சொல்லியா??

(கரைக்டா சொல்லனும்... தப்பா சொன்னா அடுத்த வாட்டி அந்த லிஸ்ட்ல என் பேரும் வரும் அப்படினு மிக மனவருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன்..)

கருடன் said...

@டோண்டு

//@வெளியூர்க்காரன்
முதல் தடவை வரும்போதுதான் ஹிட்ஸ்வ் ஏறும், அதே தினம் மறுபடி அதே ஐபிலேருந்து வந்தா ஹிட்ஸ் ஏறாதுன்னு கூட தெரியாத கபோதிக் கொசுவா நீர்?//

நீங்க யாரையாவது சண்டைக்கு இழுப்பிங்க என்ன விஷயம் சொல்லி தெரிஞ்சிக்க பல பேர் உங்க ப்ளாக் வருவாங்க உங்க ஹிட்ஸ் ஏறும் அப்படினு இந்த மானம் கெட்ட வெளியூர்கார நாய் சொல்ற வெளிபடையான கருத்தே உங்களுக்கு புரியலையே நீங்க எப்படி சிக்கலான விஷயங்களை சரியா புரிஞ்சிட்டு இருப்பிங்க நீங்களே நம்ம்ம்ம்ம்பி அடுத்தவங்க கேள்விக்கு பதில் சொல்ல கிளம்பிட்டிங்க... சும்மா டவுட்டு.

(பதில் சொல்ரவங்க எம்புட்டு அறிவாளி தெரிய வேண்டாமா?? என்னை பச்ச புள்ளையா நினைச்சி கேவபடாம பதில் சொல்லுங்க சாமி..)

dondu(#11168674346665545885) said...

@TERROR-PANDIYAN(VAS)
பதில்தானே, சொன்னாப் போச்சு.

பார்வதி அம்மாள் விவகாரத்திலிருந்து பார்த்து வருகிறேன். சாதாரணமாக எனது கருத்தைச் சொன்னதற்கு எனது சாதியையெல்லாம் இழுத்து கேவலாமக பதிவு போடுவார்கள். நான் எதிர்வினை இல்லாமல் இருக்கணுமா?

ராஜன் திருமண விஷயத்தில் நான் யதார்த்தமாக ஒரு பதிவைப்போட அதை வைத்துக் கொண்டு இவர்கள் குதித்ததை விடவா? பார்க்க: http://pattapatti.blogspot.com/2010/10/dont-do.html

//ஊர்ல இருக்கவன் எல்லாம் உங்கள ரொம்ப கேவலமா திட்டறான் (யாருனு கேக்க கூடாது நான் பயந்த சுபாவம்) அவங்களை எல்லாம் விட்டு மங்குனி, பன்னிகுட்டி மட்டும் புதுசா உள்ளை இழுத்து இருக்கிங்களே ஏன்?//
அவங்க பேரையும் சொல்லி ஆகியோர்னு போட்டிருக்கேனே பாக்கலையா? யார் திட்டறாங்களோ அவங்களுக்குத் தெரியும்.

//கரைக்டா சொல்லனும்... தப்பா சொன்னா அடுத்த வாட்டி அந்த லிஸ்ட்ல என் பேரும் வரும் அப்படினு மிக மனவருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன்.கரைக்டா சொல்லனும்... தப்பா சொன்னா அடுத்த வாட்டி அந்த லிஸ்ட்ல என் பேரும் வரும் அப்படினு மிக மனவருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன்.//
அதுக்கெல்லாம் நீங்க மனவருத்தபட மாட்டீங்கன்னுதான் நான் நினைக்கிறேன். சந்தோஷமாகவே அதை செய்தீங்க, செய்யப் போறீங்க. போய் உங்க தளங்களிலே நடத்துங்க.

நீங்க கேட்டதையெல்லாம் நான் பதில்கள் பதிவுல வர லாயக்கில்லைன்னு நினைத்ததாலே இங்கேயே பதில் சொல்லி விட்டேன்.

ஹிட்ஸ் ரேட்டைப் பத்தி வெளியூர்க்காரன் சொன்னதுக்குத்தான் எனது பதில்.

இன்னொரு விஷயம், வெளியூர்க்காரன், மற்றும் பட்டாப்பட்டி பேரை நான் சேத்ததுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கலை, அவங்களும் கூடத்தான் அதை ஒத்துக்கிட்டா மாதிரி இருக்குன்னு தோணறது.

மீதிப்பேர் அவங்களுடன் சேர்ந்து கும்மி அடித்ததுக்காகத்தான் லிஸ்டுல வந்தாங்க.

டோண்டு ராகவன்

மங்குனி அமைச்சர் said...

ஹா, ஹா,ஹா,ஹா ,,,....................நன்றி சார்

இம்சைஅரசன் பாபு.. said...

பாசத்திற்குரிய தங்க தலைவர் ,தானைய தலைவர் ,பதிவுலகை தூக்கி புடிக்கும் டோண்டு அய்யா அவர்களுக்கு ஏன் ஒருத்தரை குறிப்பிட்டு ஒரு பதிவை போட வேண்டுமா உங்களுக்கு?யார் இந்த பட்டபட்டி ....வெளியூர்காரன்.எனக்கு தெரியாதே .............சரி மங்குனி நல்ல பதிவர் தானே ..........பன்னிகுட்டி ராமசாமி அவரும் நல்ல பதிவர்.
மங்குனி ,பன்னி இவங்க followers எல்லோரும் உங்க பதிவ பார்த்து ஹிட்ஸ் கூடணும்னு அவர்களை கூட சேர்த்துகிட்டீங்களா? ..................நீங்கள் ஏன் யாரையாவது தாக்கியே பதிவை எழுதுகிறீர்கள் ?

கருடன் said...

@Dondu

//சந்தோஷமாகவே அதை செய்தீங்க//

எங்க?? இதுவரை ஒரு இடத்துல உங்களை பற்றி தப்பா ஒரு வார்த்தை சொல்லி இருப்பதை காட்ட முடியுமா? நீங்க கொடுத்த அதே லிங்க்ல என் கமெண்ட் இருக்கு போய் படிச்சிட்டு வந்து நான் பொதுவா சொன்னேன், அப்படி இப்படி மழுப்பாம பதில் போடுங்க பார்ப்போம்.

//செய்யப் போறீங்க. போய் உங்க தளங்களிலே நடத்துங்க.//

உங்க எதிர்காலம் கணிக்கு திறன் என்னை ஆச்சரியப்பட வைக்குது.

//நீங்க கேட்டதையெல்லாம் நான் பதில்கள் பதிவுல வர லாயக்கில்லைன்னு நினைத்ததாலே இங்கேயே பதில் சொல்லி விட்டேன்.//

சும்மா சும்மா காமடி பண்ணாதிங்க சார். உங்க பதில்கள் பதிவுல வந்தா எதோ ஜனாதிபதி அவர்டு கிடைக்கிற மாதிரி சொல்றிங்களே... எனக்கு வேண்டியது விளக்கம் அது எங்க வந்தா என்ன?

dondu(#11168674346665545885) said...

//எங்க?? இதுவரை ஒரு இடத்துல உங்களை பற்றி தப்பா ஒரு வார்த்தை சொல்லி இருப்பதை காட்ட முடியுமா? நீங்க கொடுத்த அதே லிங்க்ல என் கமெண்ட் இருக்கு போய் படிச்சிட்டு வந்து நான் பொதுவா சொன்னேன், அப்படி இப்படி மழுப்பாம பதில் போடுங்க பார்ப்போம்.//
ஒத்துக்கறேன், நீங்க சொல்லவில்லைதான். நான் கூறியதை வாபஸ் வாங்குகிறேன். மன்னிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

pichaikaaran said...

1 என்திரனில் ரஜினியின் நெகடிவ் கேரகர்தான் அதிகம் ரசிக்கப்பட்டது.. இப்படி நெகடிவ் கேரக்டர்களை ரசிக்கும் மனோபாவம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானதா, அல்லது உலகம் முழுதும் இப்படித்தான?
அறிவு ஜீவிகள் என தம்மை கருதிகொள்ளுவோர் இதே சினிமா மனோபாவத்தில்தானே இருக்கிறார்கள்..
2 இலங்கையில் ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டபோது ஏற்படாத அதிர்ச்சி , பாலியல் போராளி திரு. மோகன்ராஜ் கொல்லப்பட்டபோது ஏற்பட்டதற்கு தமிழர்களின் நெகடிவ் வொர்ஷிப் தான் காரணம் என நினைக்கிறேன்.. ( அவருக்கு சட்டப்படி தூக்கு தண்டனை வித்டிதாலும், நம் மக்கள் உணர்ச்சியில் கொந்தளித்து இருப்பார்கள்) இந்த நெகடிவ் வொர்ஷிப் பற்றி உங்கள் கருத்து ?

pichaikaaran said...

1. சாதாரண நிலையில் இருக்கும்போது பொதுஜனத்தோடு இணைந்து இருக்கும் நாம் , சற்று வசதி வந்ததும் , மக்களுக்கு அப்பாற்பட்ட அறிவு ஜீவிகளாக நம்மை நினைத்து கொள்ள ஆரம்பிப்பது ஏன் ?
2. ழ என்ற எழுத்து தமிழின் சிறப்பு எழுத்து என்பது போல , நீங்கள் அறிந்த மொழிகளின் தனிப்பட்ட எழுத்து அல்லது தனிப்பட்ட தன்மை என்ன ?

அருள் said...

பார்வையாளன் said...

// //1. நெகடிவ் கேரக்டர்களை ரசிக்கும் மனோபாவம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானதா, அல்லது உலகம் முழுதும் இப்படித்தான?// //

ஹா... ஹா... இதெல்லாம் புராண காலத்திலேயே இருக்கு.

திறமைசாலி ஏகலைவனைவிட ஏமாற்று பேர்விழி அர்ச்சுணன் சிறந்த வீரன் என்று போற்றப்படவில்லையா?

மாவீரன் வாலியை விட, அவரை மறைந்திருந்து கொன்ற கோழை இராமன் கடவுளாக வணங்கப்படவில்லையா?

இப்படி இராமன், அர்ச்சுணன் போன்ற "நெகடிவ்" கேரக்டர்களை ரசிக்கும் மனோபாவம் யாரால் வந்தது என்று நீங்களே யோசித்து சொல்லுங்கள்.

// //2. இலங்கையில் ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டபோது ஏற்படாத அதிர்ச்சி , பாலியல் போராளி திரு. மோகன்ராஜ் கொல்லப்பட்டபோது ஏற்பட்டதற்கு தமிழர்களின் நெகடிவ் வொர்ஷிப் தான் காரணம் என நினைக்கிறேன்.// //

பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டபோது, ஏராளமானோர் அதனைக் கண்டித்தார்கள். செலக்டிவ் அம்னீஷியா போன்று உங்களுக்கு அதெல்லாம் கண்ணில் படவில்லை போலிருக்கிறது.

பாலியல் போராளி பெரியவா ஜெயேந்திரர் (பெரிய மூங்கில்), பாலியல் போராளி திரு. தேவனாதன் போன்று மோகன்ராஜ் ஒரு வில்லனாகத்தான் மக்களால் கருதப்பட்டார். அவர் கொல்லப்பட்டதற்கு தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்பது தவறான தகவல். அப்படியெல்லாம் பெரும்பாலான மக்கள் கருதவில்லை.

Arun Kumar said...

1. +2 க்கு ஒரு வருடம் நீடிப்பு என்று சொன்னால் எப்படி சொல்லாம்??? ஒரே கண்டிசன் +3ன்னு சொல்ல கூடாது...

2.ஏன் newton third lawக்கு அப்புறம் வேறு எந்த lawவும் வரவில்லை..நீயுட்டன் போடா ஜாட்டான் என்று சொல்லிவிட்டாரா??

pichaikaaran said...

கடவுள் இருக்கிறார் என சிலர் நம்புகிறார்கள்.. இல்லையென சிலர் நம்புகிறார்கள்...

கடவுளைப்பற்றி எந்த கருத்தும் இல்லாமல் இருக்க மனிதனால் ஏன் முடியவில்லை?

pichaikaaran said...

அவர் கொல்லப்பட்டதற்கு தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்பது தவறான தகவல். அப்படியெல்லாம் பெரும்பாலான மக்கள் கருதவில்லை"

எந்த பாவமும் செய்யாத அம்பிகா என்ற தொழிலாளி துடிக்க துடிக்க இறந்த போது எந்தனை பேர் அதை கண்டித்து எழுதினார்கள் என்பதையும், மோகன்ராஜ் இறந்த போது எத்தனை பேர் ஆவேசமாக அதை எதிர்த்தனர் என்ப்தையும் நீங்களே ஒப்பிட்டு பார்த்துகொள்ளுங்கள்..

டோண்டு சார், இதற்கான காரணத்தை தனி கேள்வியாக கருதி பதில் அளித்தாலும் ஓக்கே ...

அருள் said...

பார்வையாளன் said...

// //எந்த பாவமும் செய்யாத அம்பிகா என்ற தொழிலாளி துடிக்க துடிக்க இறந்த போது எந்தனை பேர் அதை கண்டித்து எழுதினார்கள் என்பதையும், மோகன்ராஜ் இறந்த போது எத்தனை பேர் ஆவேசமாக அதை எதிர்த்தனர் என்ப்தையும் நீங்களே ஒப்பிட்டு பார்த்துகொள்ளுங்கள்..// //

அவருக்காக அழுதார்களா? இவருக்காக அழுதார்களா? என்று ஒப்பிட்டால், அது மிக நீண்டதாக போகும். ஒருவருக்காக வருந்துபவர் இன்னொடுபவருக்காக வருந்த வேண்டும் என்றோ, வருந்தக்கூடாது என்றோ எவரையும் கட்டாயப்படுத்த முடியாது.

பாலியல் போராளி பெரியவா ஜெயேந்திரர் (பெரிய மூங்கில்), பாலியல் போராளி திரு. தேவனாதன் போன்று மோகன்ராஜ் ஒரு வில்லனாகத்தான் மக்களால் கருதப்பட்டார். அவருக்கு ஆதரவாக ஒரே ஒருவர் கூட பேசியதாக எங்கும் காணப்படவில்லை. மோகன்ராஜின் மனைவி, உறவினர்கள் கூட அவருக்கு பரிவாக பேசவில்லை என்பதே உண்மை.

எந்த ஒரு குற்றவாளியும் சட்டத்தின் வழியில் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நாகரீகமடைந்த சமூகங்களின் வழிமுறை. அதற்கு மாறாக, காட்டுமிராண்டி கூட்டத்தைப்போல "என்கவுன்டரில்" போட்டுத்தள்ளும் கேடுகெட்ட வழிமுறையைதான் சிலர் எதிர்த்தார்கள்.

இந்த காட்டுமிராண்டி வழிமுறையை எதிர்ப்பதைத்தான் நீங்கள், "மோகன்ராஜ் இறந்த போது ஆவேசமாக அதை எதிர்த்தனர்" என்று திசைதிருப்புகிறீர்கள்.

என்கவுன்டரை எதிர்ப்பது மோகன்ராஜின் செயலுக்கு ஆதரவு அல்ல. குற்றத்திற்கு மற்றொரு குற்றம் ஈடாகாது.

dondu(#11168674346665545885) said...

@பெரியார்
வில்லங்கமில்லாத கேள்விகள் கேட்க மூடிய ப்ரொஃபைலாக இருந்தாலும் அனுமதிப்பேன். ஆனால் பிறரைத் தாக்க வேண்டுமானால் மூடிய ப்ரொஃபைல் போதாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

pichaikaaran said...

"அவருக்கு ஆதரவாக ஒரே ஒருவர் கூட பேசியதாக எங்கும் காணப்படவில்லை"

அருள் சார்.. மோகன்ராஜை வில்லனாகத்தான் பார்த்தார்கள்.. இல்லை என சொல்லவில்லை..

ஆனால் நம்மில் ஒருவரான சகோதரி அம்பிகா மரணத்துக்கு , இந்த அளவு எதிர்வினை இருந்ததா என நடுனிலயுடன் பேசுங்கள்..

நிர்வாகத்தின் அலட்சியதால் அவர் இறந்தது , என்கவுண்டரை விட கொடூரமானது..

அனால் இப்போது டென்ஷன் ஆகும் மக்கள் அப்போது இதை ஒரு விஷ்யமாகவே நினைக்கவில்லை...( மிக மிக சில விதிவிலக்குகள் மட்டும் உண்டு )

R. Gopi said...

Paul Gauguin என்ற ஓவியரைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம். இதில் Gauguin என்ற வார்த்தைக்குத் தமிழ் transliteration கொடுங்கள். மிக்க நன்றி.

பீஸ் எல்லாம் கிடையாது! Paul Gauguin பற்றி எழுதும் பதிவில் உங்களுக்குப் பெரிய கிரெடிட் உண்டு (தம்பிடி பிரயோஜனம் கிடையாது அதனால் உங்களுக்கு என்ற போதிலும்!)

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது