5/25/2009

இலங்கை பிரச்சினை பற்றி சோவுடன் நேர்காணல் - 19.05.2009

சோ அவர்கள் ET-க்கு தந்த பிரத்தியேக நேர்காணலில், அவர் ஸ்ரீலங்காவின் லேட்டஸ்ட் நிகழ்வுகள், தமிழகத்தில் அவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்பு, ஸ்ரீ லங்காவின் தமிழர்களுக்கு வந்துள்ள பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக இந்திய அரசு செய்ய வேண்டிய விஷயங்கள் ஆகியவை பற்றி விவாதிக்கிறார். அதன் சுட்டியை எனக்கு அனுப்பிய நண்பர் சந்திரசேகருக்கு நன்றி. நேர்காணலுக்கு செல்வோமா?

தமிழக தேர்தலில் ஒரு பிரச்சினையாக காணப்பட்ட ஸ்ரீலங்கா யுத்தத்தின் முடிவு இப்போது தமிழகத்தில் எம்மாதிரியான எதிர்வினைகளை கொண்டு வரும் என எண்ணுகிறீர்கள்?
இங்குள்ள சில விளிம்பு நிலை மனிதர்கள் சில போராட்டங்களில் ஈடுபடலாம், சிலர் தீக்குளிக்கும் அளவுக்குக்கூட போகலாம். ஆனால் அப்போராட்டங்கள் எல்லாமே மானில அரசால் சுலபமாக அடக்கப்பட்டு விடும். ஏனெனில் அம்மாதிரியான போராட்டங்களுக்கு பொது மக்கள் ஆதரவு கிட்டாது. நான் ஏற்கனவேயே கூறி வந்ததைப் போல இது எப்போதுமே எந்த தேர்தலிலும் ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை, இப்போது முடிந்த தேர்தலிலும் கூட அதே நிலைதான். எதிர்க்கட்சிகள் கோஷம் போட சில வாய்ப்புகள் உண்டு, ஆனால் அதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை.

இங்குள்ள இளைஞர்கள் என்ன செய்வார்கள்? அவர்களது சக உணர்வு போராட்டங்களாக வெடிக்காதா?
தமிழனுக்கு தமிழன் என்னும் அளவில் சக உணர்வு இருக்கும். ஆனால், கோபமுள்ள போராட்டமாக அவை மாற வாய்ப்பில்லை. புலிகளை பொருத்தவரை இங்குள்ள தமிழர்களுக்கு அவர்களுடன் சக உணர்வு இல்லை. ஒரு வேளை தேர்தலில் பேசப்படும் பிரச்சினையாகலாம் ஆனால் கட்சிகள் போராட்டங்களுக்கு ஆதரவு தரும் அளவுக்கு அது போகாது.

அரசியல் பக்கத்தைப் பார்ப்போம். புலிகள் ஆதரவு தொல். திருமாவளவன் ஓரிடத்தில் ஜெயிக்கும் அதே நேரத்தில் இன்னொரு புலி ஆதரவாளர் வைக்கோ தோற்கிறார். இது எதை காட்டுகிறது?
அதான் சொன்னேனே, புலிகள் ஒரு தேர்தல் பிரச்சினயாக பார்க்கப்படவேயில்லை என. அவர்கள் ஆதரவாளர் என்ற ஒருவரை தேர்ந்தெடுப்பதோ அதே காரணத்துக்காக நிராகரித்ததோ இங்கு நடக்கவில்லை, அவ்வளவுதான்.

புலிகளின் தோல்வியால் தமிழகத்துக்கு அகதிகள் வருவது அதிகரிக்குமா? இதில் பார்க்க வேண்டிய விஷயங்கள் என்ன?
ஸ்ரீலங்கா ராணுவம் அவர்களை கொடுமையாக நடத்தினால் இங்கு அகதிகள் வரும் வாய்ப்பு உண்டு. அதே நேரத்தில் அகதிகளுடன் அகதிகளாக புலிகளும் வராமல் நாம் பார்த்து கொள்ள வேண்டும். அங்கும் பல சிவிலியன்கள் பாதுகாப்பு பகுதிகளுக்கு சென்றுள்ளனர், அவர்களில் எத்தனை புலிகள் அடங்குவர் என்பதை நான் அறியேன். ஆயுதங்களை பிற்கால உபயோகத்துக்காக எங்காவது புதைத்து வைத்திருந்தாலும் வைத்திருக்கலாம். ஆகவே இலங்கை அரசும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இப்பிரச்சினைக்கு தீர்வாக எதை காண்கிறீர்கள்?
ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழர்களுக்கு அதிக அனுகூலங்களை அது தன்னுள் கொண்டிருந்தது. அதை கெடுத்தது புலிகளே. மெதுவாக ஒரு சமஷ்டி அரசியல் அமைப்பு அங்கு உருவாக வேண்டும்.

தனி ஈழம் அமைப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
தனி ஈழம் என்றால் இலங்கையை துண்டாட வேண்டும். அதற்கு நான் எப்போதுமே எதிர்ப்பு தெரிவித்தவன். இலங்கை துண்டாடப்பட வேண்டும் என்பது எனது ஆலோசனை அல்ல. இந்தியர்களும் அதை கோரக்கூடாது. இலங்கையின் உள்ளே ஒரு தமிழ் மாநிலம், சிங்களவர்களுக்கு இருக்கும் அதே உரிமைகளோடு என்பதுதான் சரியாக அமையும்.

இந்தியா இப்போது என்ன செய்ய வேண்டும்?
இந்திய அரசு தேவையானால் அழுத்தம் கொடுத்து ஸ்ரீ லங்கா அரசு ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற செய்ய வேண்டும். படைகளை அனுப்பக் கூடாது. இந்த பிரச்சினைக்கு அடிப்படை காரணமே இலங்கை அரசுதான். அவர்கள் தமிழர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்தியதே இதற்கெல்லாம் காரணம். அதனால்தான் தீவிரவாதமும் தலை தூக்கிற்று. ஆனால் பிரச்சினையை மேலும் எடுத்து பெரிதாக்கியது பிரபாகரனே. தமிழ் தலைவர்கள் மற்றும் மக்களை கொன்று குவித்து அவரே பிரச்சினையாகிப் போனார்.


மீண்டும் டோண்டு ராகவன். இந்த நேர்காணலின் சுட்டியை எனக்கு அனுப்பிய நண்பர் சந்திரசேகரனுக்கு மீண்டும் நன்றி.

இத்தருணத்தில் எனது நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 25.05.2009 பதிவில் நான் எழுதிய இந்த வரிகளை இங்கு மீண்டும் தருகிறேன்.

“அவர் (பிரபாகரன்) இருக்கிறார் என்கிறார்கள், இல்லை என்கிறார்கள். இன்னும் அறிக்கை போர்கள் விடாமல் நடக்கின்றன. இதுவரை நம்பகத்தன்மை கொண்ட பத்மநாதன் துரோகி என்கிறார் வைக்கோ. என்ன நடக்கிறது இங்கே? ஸ்ரீலங்கா அரசை பொருத்தவரை அவர் இறந்து விட்டார் எனக் கூறி விட்டது. போட்டோக்களையும் காட்டியது, உடலையும் எரித்து விட்டது. அதை பொருத்தவரை தீர்ந்தது விஷயம். அதே சமயம் புலிகள் தரப்பு இன்னும் ஒத்துக் கொள்ளாதது அவ்வரசுக்குத்தான் சாதகமாக முடியும்.

ஏனெனில் இதை வைத்து எஞ்சி இருக்கும் தமிழர்களை சந்தேகத்தின் பார்வையில் வைக்க இயலும். வீரம் பேசும் நேரம் இதுவல்ல”.


அன்புடன்,
டோண்டு ராகவன்

4 comments:

K.R.அதியமான் said...

my recent mail to a blogger friend :

Dear G,

I read your posts about Pirabakaran and LTTE recently.

Our family was actively supporting certain Eelam militants way
back in 80s and there was a tranning camp near karur in mid 80s.
My brother (who is no more) was actively involved in that camp
and i got to know some of them in course of time. i had
also attended some public meetings at karur by
Amirthalingam and also TELO leader Srisabarathnam ;
also once visited a trainning camp near pudukottai,
of PLOT and Uma Maheshwaran was there at that time.
All of them were mercilessly gunned down later by
LTTE and we were shocked and greived by this.

LTTE started as a genunie freedom fighting org,
but later went astray and became a fascist org
and lost all its ideals. all the accusations about
using innocent tamil civilians as human shields are
all true enough.

We were disillusioned years back and find no
difference between the two fasicst forces in
SL : LTTE and SL govts.

see this recent BBC interview from a refugee camp :

http://news.bbc.co.uk/2/hi/south_asia/8013016.stm
Eyewitness: 'I thought, I won't survive'

also see this long report in wiki about the past
LTTE murders and genocide :

http://en.wikipedia.org/wiki/List_of_attacks_attributed_to_the_LTTE

and LTTE's methods to raise funds included arms, drugs
smuggling for anyone ; extortion from Eelam diaspora,etc
also they forced recruited boys.

See these too :

USD200 million profit margins maintain sophisticated Tamil Tiger war
http://www.janes.com/press/press/pc070719_1.shtml

from Jane's Defence Weekly :
http://www.janes.com/security/international_security/news/jwit/jwit070327_1_n.shtml

and i wrote the following in orkut :

ஆன்டன் பாலசிங்கம் என்னும் ஞானி
விடுதலை புலிகளில் முக்கிய தலைவர் மற்றும் குரு போனறவர் ஆன்டன்
பாலசிங்கம். ஆரம்ப நாட்களில் இருந்தே பிரபாகரனின் முக்கிய கூட்டாளியாக,
ஆலோசகராக, வழிகாட்டியாக, இருந்தவர். அவரின் மனைவி அடேல் பாலசிங்கம்
(ஆஸ்த்ரேலியா நாட்டை சேர்ந்தவர்) பெண் புலிகளுக்கு தலைவராக சிறுது காலம
பணியாற்றியவர். புலிகளில் தலைமைக்கும் இவர்கள் இருவரும் மிக
முக்கியமானவர்கள்.

உலக அரங்குகளில், தமீழ மக்களின் துன்பங்களை, சிங்கள அரசின் இனவாதத்தை
கொண்டு சென்றவர்கள். சிங்கள் அரசுகளுடன் புலிகள் நடத்திய அனைத்து
பேச்சுவார்த்தைகளிலும் பங்கு கொண்டார்.

பாலசிங்கம் பெரிய அறிவாளி ; உலக அறிவும், ஆழ்ந்த வாசிப்பனுபவும், தொலை
நோக்கு பார்வையும் கொண்டவர்.

யாதார்த்தை முற்றிலும் உணர்ந்தவர். 1994இல் சந்திரிக்கா அளித்த ஃபெடரல்
தீர்வை ஏற்றிருக்கலாம் என்று 2003இல் கிளினோச்சியில் ஒரு கூட்டத்தில்
வெளிப்படையாக‌ பேசினார். மாறும் உலகத்தையும், எதிரியின் பலத்தையிம்,
புலிகளின் பலத்தையும் அறிந்தவர்.

அவரின் தீர்க்கதரிசனமான வாதங்களை புலிகளின் தலைமை கேட்டக்க‌வில்லை.

http://en.wikipedia.org/wiki/Anton_Balasingham

http://www.timesonline.co.uk/tol/comment/obituaries/article754765.ece
Anton Balasingham
Journalist who became the chief strategist and negotiator of the Tamil
Tigers in their struggle for autonomy


this is a mail from my professor :

sub : intransigence of LTTE

Dear Athiyaman,

The LTTE wasted all glorious opportunities for an honourable
compromise. Mr. Anton
Balasingam also has to share a part of the blame. The worst crime is
the unnecessary
suffering and loss of lives in the last three months when LTTE knew
that it had absolutely
no chance of victory. By their mistake, they have also done a lot of
disservice to the surviving
members of the Tamil community.

But past is past.

If the scoundrels of Tamilnadu politics keep their mouth shut at this
hour of immense tragedy,
it might benefit the surviving members of Tamil community in Sri Lanka
more. By trying to make
the gullible believe that Prabhakaran is still alive, these rascals
want to ensure their political
survival in Tamilnadu unmindful of the effect it would have to fan the
Sinhalese majoritarian
propoganda and politics.

Let us hope for the best.


--
Regards / அன்புடன்

K.R.Athiyaman / K.R.அதியமான்

Anonymous said...

பிரபாகரன் + புலி மக்களிடம் வறுகிய கோடி கணக்கான டொலர்களை தமது சொந்தமாக மாற்றுவதில் புலிகளுக்கிடையில் அடி தடி இப்போ நடந்து கொண்டிருக்கிறது.

Anonymous said...

Now Kalaignar wants Sri Lanka to implement Rajiv - Jayawardena accord of 87. If this could have been done then, we would saved so many lives, saved a life of our former PM and had a friendly ally in Sri Lanka. All we are left now is the Chinese presence in Sri Lanka.

Regards.
Partha, New Jersey

மதிபாலா said...

இலங்கைப் பிரச்சினை பற்றி சோவிடம் நேர்காணலா.?

மொட்டைத் தலைக்கும் , மொழங்காலுக்கும் என்ன முடிச்சு வேண்டிக்கிடக்கிறது?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது